2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெற்றுக்காணியில் குண்டுவெடிப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா வேடர் குடியிருப்பு பகுதியிலுள்ள வெற்றுக் காணியொன்றில், குண்டுவெடிச் சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து காணி உரிமையாளர், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில், நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, காத்தான்குடி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இன்று (18) குறித்த இடத்துக்குச் சென்று விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இனந்தெரியாதோரால் மோட்டார் சைக்கிளொன்றில் குண்டு வைக்கப்பட்டு, இக்காணியில் வெடிக்கச் செய்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் இக்காணியின் சுற்று வேலி சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .