2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹெரோய்ன் கடத்திய மூவருக்கு விளக்கமறியல்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் மூவரை, நாளை (04) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எம்.ஐ.எம்.ரிஸ்வி உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று வெவ்வேறு இடங்களில், ஹெரோய்ன் போதைப்பொருட்களுடன், இவர்கள், காத்தான்குடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். சந்தேகநபர்களை, மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .