2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

100 அடி பள்ளத்தில் விழுந்து பெண் தொழிலாளி பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர்,  சுமார் 100 அடி பள்ளத்தில் வழுக்கி விழுந்து, ஸ்தலத்திலேயே பலியானச் சம்பவம், மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சின்னையா தெய்வானை (வயது 56) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக சடலம் காட்மோர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .