2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அக்கரப்பத்தனையில் 10 பேர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்

ஆர்.மகேஸ்வரி   / 2018 மே 21 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரப்பத்தனை- நியு​போட்மோர் தோட்டத்தின் எல்டோரி பிரிவிலுள்ள இரண்டு வீடுகள் மீது மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் குறித்த வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதில் இடிந்து வீழ்ந்ததில் குறித்த இரு வீடுகளுக்கும் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இரு வீடுகளில் வசித்தவர்கள்  தோட்ட வாசிகசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அக்கரப்பத்தனை பிரதேசத்தில் நேற்று (20) காலை தொடக்கம் இன்று பகல் வரை அடைமழைத் தொடர்வதால், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தமது அன்றாட கடமைகளை முன்னெடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .