2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அக்குறணையில் 144 பேர் பூனானி கண்காணிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அக்குறணை பிரதேசத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர், சனிக்கிழமை மாலை இனங்காணப்பட்டதையடுத்து, அப்பிரதேசத்தைச் சேர்ந்த 144 பேர், புனானி கண்காணிப்பு நிலையத்துக்கு, இன்று (5) காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று, அக்குறணைப் பிரதேச பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

அக்குறணைப் பிரதேசத்தில், இதுவரை அறுவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன், நேரடித் தொடர்பை வைத்திருந்தவர்கள், தாமாக முன்வந்து, பொலிஸாருக்கு அல்லது தமக்கு தகவல்கள் வழங்குமாறு, பொதுசுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .