Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 22 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக, நடைபாதை வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இது பண்டிகைக் காலம் என்பதால், தமது வியாபார பொருட்களை நடைபாதையில் வைத்து வியாபாரம் செய்ய முடியாத நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் பொருட்கள் கொள்வனவுக்காக, வருவோரின் எண்ணிக்கையும் வழமையைவிட குறைந்துள்ளதாகவும் நடைபாதை வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்துவருவதால், தமது வியாபார பொருட்களிலும் மழைநீர் புகுந்துள்ளதாகவும் பிரதான வீதிகளில் வெள்ளநீர் வடிந்தோடுவதாகவும் நடைபாதை வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பண்டிகைக் காலத்தை நம்பி கடனுக்கே பொருட்களை கொள்வனவு செய்ததாகவும் வியாபாரம் சூடுப்பிடிக்காதததால் தாம் பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago