2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அமரர் தொண்டமானின் சிரார்த்த தினத்துக்கு புத்தகக் கண்காட்சி

Editorial   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக வரலாற்றில் 80 ஆண்டுகளைக் கடந்து, 81அவது ஆண்டில் கால்பதித்துக் கொண்டிருக்கின்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 20ஆவது சிரார்த்த தினமான ஒக்டோபர் 30ஆம் திகதி, அவரது நினைவாக, புகைப்பட, ஆவணக் கண்காட்சியும், சௌமிய பவனில் இ.தொ.கா தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் மலையக கலாசார ஒன்றியமும் இணைந்து நடத்தும் இக்கண்காட்சியில், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் சந்தித்த பல்வேறு உரிமைப் போராட்டங்கள் பற்றியதான தகவல்கள், நூல்கள் உருவில் வெளிவந்த புத்தகங்கள், இதர அடையாளப்படுத்தப்பட்ட விடயங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வாசகர்கள், அபிமானிகள், நலன்விரும்பிகள் அனைவரும், அமரர் தொண்டமான் பற்றியதான வரலாற்றுக் குறிப்புகள், நூல் உருவில் வெளிவந்த புத்தகங்கள் இன்னும் புகைப்பட பிரதிகள், தகவல்கள் ஆகியவற்றை அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

தகவல்கள் அனுப்ப வேண்டிய முகவரி, “ஊடக இணைப்பாளர், 72 ஆனந்தகுமாரசுவாமி மாவத்தை, கொழும்பு 07”. அலைபேசி இலக்கம் - 071 6876548/ 0705867977. மின்னஞ்சல் savarimuthudevadasShgmail.com/ cwcmedia72Shgmail.com ஆகியவற்றுக்கு, இம்மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .