2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘அமைச்சர் திகா பொதுமக்களின் கௌரவத்துக்கு உரியவர்’

Editorial   / 2019 பெப்ரவரி 10 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் பொதுமக்களின் கௌரவத்துக்குரியவர் என துறைமுகங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவின் கோரிக்கைக்கமைய, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மாத்தறை- தெனியாய , செல்வகந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் இன்று (10) கலந்துக்கொண்டப் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் சாகல,

அமைச்சர் திகாம்பரம் தோட்டத் தொழிலாளர்களின் கௌரவத்துக்குரியவர் மட்டுமின்றி தோட்டத் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும், போராடும் அமைச்சர் என்றும் தெரிவித்துள்ளதுடன் இந்த தனி வீட்டுத் திட்டத்தை மலையக மக்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் தெற்கிலுள்ள தொழிலாளர்களுக்கும் தனி வீடுகளை வழங்க முன்வந்துள்ளமைக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .