2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டல்

Editorial   / 2019 பெப்ரவரி 04 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி. பெருமாள்

வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வழிகாட்டலின் கீழ், நாடெங்கிலும் 50 அறநெறிப் பாடசாலைகளை அமைக்கும் பணிகள், மஸ்கெலியாவிலும் இன்று (04) ஆரம்பிக்கப்பட்டன.

“ஆன்மீகத்தோடு இணைந்த அபிவிருத்தி; மாணவர்களுக்கு நிழல்கொடுக்கும் அறநெறிப் பாடசாலை” என்னும் இத்திட்டத்தின்கீழ், எபடின் பௌத்த விகாரைக்கு அருகில், பௌத்த அறநெறி பாடசாலை அமைக்கப்படவுள்ளது.

சுமார் 40 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்தப் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று காலை (4) 10.30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாச கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .