2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அறுவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2018 ஜூலை 23 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயன் மற்றும் கேரளா கஞ்சாவுடன், ஹப்புத்தளை - விஹாரகல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட அறுவரையும், எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, பண்டாரவளை நீதவான், நேற்று  (22) உத்தரவிட்டார்.

மேற்படி பிரதேசத்தில், சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்த லொறியைச் சோதனை செய்த பொலிஸார், அந்த லொறியிலிருந்து, 332 ஹெரோய்ன் பக்கெட்டுகள் மற்றும் 401 கிராம் கேரள கஞ்சா என்பவற்றைக் கைப்பற்றியதுடன், லொறியில் இருந்த அறுவரை, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.

இவர்களை, நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .