2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆக்கரத்தன்ன தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா 

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பசறை - ஆக்கரத்தன்ன தோட்டத் தொழிலாளர்கள், இன்று (25) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.  இதன்போது, சுமார் 1,000 பேர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர். 

தொழிலாளர்கள் கொய்த தேயிலைக் கொழுந்துகள், தொழிலாளர்களால் சேகரிக்கப்பட்ட இறப்பர் பால் என்பவற்றை ஏந்தியவாறு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்கள் இருவரை கைது செய்தமையை ஆட்சேபித்தும், தோட்டக் காணியை வெளியாருக்கு வழங்குவதை எதிர்த்தும், இப்பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இப்பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .