2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

 

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஞ்சுராவ - ஹத்லாவ பகுதியிலிருந்து, ஆணொருவரின் சடலமொன்று, இன்று (19) காலை மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சுனில் வனிகசேகர திஸாநாயக்க (வயது 59) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குறித்த நபர், தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தினமும், நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்துவதாகவும், பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த நபர், செவ்வாய்க்கிழமை (17) அல்லது புதன்கிழமையன்று (18) உயிரிழந்திருக்கக்கூடுமென, பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  

மேலும், வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடப்பதாகவும் தெரிவித்த பொலிஸார், உயிரிழந்தவரின் சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக, நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைத்துள்ளதாகக் கூறியதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X