2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இ.தொ.காவின் செயற்குழுவில் அதிரடி மாற்றங்கள்

Editorial   / 2018 பெப்ரவரி 16 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயற்குழுவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைவாக இதுவரை காலமும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செயற்பட்டு வந்த பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளதுடன், இ.தொ.காவின் தற்போதையத் தலைவராகவும் செயலாளராகவும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராக  மத்திய மாகாண சபை அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைத் தொழிலளார் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடல், கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழில்நுட்பக் கல்லூரியான சீ.எல்.எப்பில், இன்றுக் காலை இடம்பெற்றது. இதன்போதே, இ.தொ.காவின் செயற்குழுவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் காங்கிரஸின் தலைவராக செயற்பட்டு வந்த பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, தான் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதேவேளை அவருக்கு காங்கிரஸின் போசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .