2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இராகலையில் 6 வீடுகள் தீக்கிரையாகின

Editorial   / 2021 ஏப்ரல் 26 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை மத்திய பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட லயக்குடியிருப்பில் நேற்று (25)  ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் பகுதியளவில் எரிந்து தீக்கிரையாகின.

இதனால்  6 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் 9வது இலக்க லயக்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டதுடன்,இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .