2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இருளில் மூழ்கியது காசல்ரீயூர்

மு.இராமச்சந்திரன்   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

நோட்டன் விமலசுரேந்திர நீர்மின் உற்பத்தி நிலையத்துக்கு, நீர் வழங்கும் காசல்ரீ நீர்தேக்கத்தின் கரையோரத்தில் அமைந்துள்ள காசல்ரீயூர், கடந்த மூன்று தினங்களாக இருளில் மூழ்கியுள்ளது.

குறித்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மின்சார தடையேற்பட்டமையால், சுமார் 500க்கும் மேற்பட்ட  பயனாளிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

மின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை தொடர்பில், கினிகத்தேனை மின்சார சபை அதிகரிகளுக்கு அறிவித்தப் போதிலும், நேற்றுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்

இந்நிலையில், கடந்த மூன்று தினங்களாக, காசல்ரீ பகுதி வாழ் மக்கள்,  பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .