Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித்த ஆரியவன்ச, எஸ்.கணேசன்
மஹியங்கனை மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில், நேற்று இரவு இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனரெனத் தெரிவித்த பொலிஸார், மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென்றும் தெரிவித்தனர்.
பதுளை- மஹியங்கனை வீதி, தம்பராவ பாடசாலைக்கு அருகில், நேற்று இரவு, மோட்டார் சைக்கிளொன்றும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின என்றுத் தெரிவித்த மஹியங்கனை பொலிஸார், இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 27 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளாரென்றும் மேலும் இருவர் காயமடைந்த நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென்றும் தெரிவித்தனர்.
விபத்தில், மஹியங்கனை உல்பொத பிரதேசத்தைச் சேர்ந்த கே.டீ.டானி மங்கலிகா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளாரென்றுத் தெரிவித்த பொலிஸார், இராணுவ வீரரான பெண்ணின் கணவரும் பெண்ணின் தாயும் காயமடைந்துள்ளனரென்றும் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், மோட்டார் சைக்கிளின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார், இவ்விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவப் பகுதியிலிருந்து ருவான்புர கிராமத்துக்குப் பயணித்த முச்சக்கரவண்டி, ருவான்புர பிரதேசத்தில், நேற்று இரவு, வீதியை விட்டுவிலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாயந்து விபத்துக்குள்ளாகியதாகத் தெரிவித்த நாவலப்பிட்டி பொலிஸார், இவ்விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளாரென்றும் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென்றும் தெரிவித்தனர்.
விபத்தில் ருவான்புர பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார (வயது – 27) என்பவரே உயிரிழந்துள்ளாரெனத் தெரிவித்த பொலிஸார், உயிரிழந்தவரும் முச்சக்கரவண்டியின் சாரதியும், மதுபோதையில் இருந்துள்ளனரென்றும் வேகக்கட்டுப்பாட்டை இழந்தே முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியதாகவும் தெரிவித்தனர்.
விபத்தில், சாரதி காயங்களுடன் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென்றுத் தெரிவித்த பொலிஸார், இவ்விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago