2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மாநாடு இன்று நடைபெறும்

Editorial   / 2019 மார்ச் 29 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஆசிரியர் சங்கத்தின்  நுவரெலியா மாவட்ட மாநாடு, ஹட்டன் ஜுப்லி மண்டபதில், இன்று(29) நண்பகல் 12 மணிக்கு  நடைபெறவுள்ளது.

இம்மாநாடு குறித்து, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்டச் செயலாளர் வே.இந்திரசெல்வன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கல்விக் கொள்கை, ஆசிரியர் பிரமாணக் குறிப்புகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களில் மலையக ஆசிரியர்களின் குரல்களும் ஒலிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

எனவே, நுவரெலியா, ஹட்டன், வலப்பனை, கொத்மலை, ஹங்குரான்கெத்த ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள்  இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மாநாடு தொடர்பான மேலதிகத்  தகவல்களுக்கு  0773676668, 0775446950 ஆகிய அலைபேசி இலக்கங்களோடு தொடர்புகொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .