2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இளைஞர்களுக்கு திகா அழைப்பு

Editorial   / 2020 ஜூலை 09 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.கிருஸ்ணா

தனது அரசியல் பயணத்தில், அன்று போலவே இன்றும் இளைஞர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சகத்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பழனி திகாம்பரம் ஏனைய இளைஞர்களையும் தன்னுடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஹட்டன் காசல்ரீயில் அமைந்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிராதன தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார். 

“எனது அரசியல் பயணத்தில், இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அதேபோல தொடர்ந்தும் இளைஞர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. அவர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டே எனது அரசியல் பயணம் தொடர்கின்றது.  எனவே, ஏனைய இளைஞர்களும் எம்முடன் கைக்கோர்த்து ஒன்றிணையுங்கள்”  என அழைப்பு விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .