2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உதிரிபாகங்கள் மாயம்

செ.தி.பெருமாள்   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளை நகரில் நிறுத்தி வைக்கப்படும் முச்சக்கரவண்டிகளின் உதிரிபாகங்கள் மாயமாவதாக பாதிக்கப்பட்டுள்ள முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கூறினர்.  

முச்சக்கரவண்டியை, நிறுத்தி வைத்துவிட்டு வெளியில் சென்று வந்து மீண்டும் பார்க்கும் போதே, உதிரிபாகங்கள் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.  

நேற்று முன்தினம் மாத்திரம், இதுபோன்ற கொள்ளை, 7 தடவைகள் இடம்பெற்றுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு ​திருட்டில் ஈடுபடும் கும்பல் தொடர்பில், அப்பகுதி வழியே பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டீ.வி கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் இதைக் கொண்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கம்பளை குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X