2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

எட்டு மதுபானக் கடைகளுக்கு சீல்

Editorial   / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

தலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை, வட்டகொடை பிரதேசத்திலுள்ள எட்டு மதுபான விற்பனை நிலையங்களுக்கு, பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொறிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மதுமானம் விற்பனை நிலையங்களுக்கு மறு அறிவித்தல் வரை மூடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது

இந்நிலையில் பொது மக்கள் அத்தியாவசிய பொருள்கொள்வனவுக்குக் கட்டம் கட்டமாக ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேற்படி மதுபானம் விற்னை நிலைய  உரிமையாளர்கள் மதுபானம் விற்பனை நிலைத்தைத் திறந்து மதுபானம் போத்தல்களை எடுத்து தோட்டப்பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே,   மறு அறிவித்தல் வரை மேற்குறித்த எட்டு மதுபானம் விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .