2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கசிப்பு காய்ச்சிய ஒருவர் கைது​

மொஹொமட் ஆஸிக்   / 2017 ஜூன் 26 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யஹலதென்ன காட்டுப் பகுதியில், நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை சுற்றி வளைத்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அச்சுற்றிவளைப்பில், 258 லீற்றர் கோடாவைக் கைப்பற்றியுதுடன், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, கண்டி பிரதான நீதவான் முன்னிலையில் நாளை (27) ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த கட்டுகஸ்தோட்டை பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .