2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கடும் மழையால் வௌ்ளத்தில் மூழ்கியது நாவலப்பிட்டி

Editorial   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்ஸ

நாவலப்பிட்டி பிரதேசத்தில் இன்று (18) பகல் பெய்த கடும் மழைக் காரணமாக, நாவலப்பிட்டி நகரின் ஒரு பகுதி வௌ்ளத்தில் மூழ்கியதுடன், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று பகல் 2 மணித் தொடக்கம் 3 மணி வரை பெய்த கடும் மழையால், நகரின் பஸ் தரிப்பிடத்திலிருந்து நாவலப்பிட்டி- கம்பளை பிரதான வீதியின் பொலிஸ் நிலையம் வரையான பகுதி நீரில் மூழ்கியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் நாவலப்பிட்டி நகர மத்தியில் மழை நீர் வழிந்தோடுவதற்கான வடிகான் கட்டமைப்பு முறையாக துப்புரவு செய்யாமைக் காரணமாகவே மழைக் காலங்களில் பிரதான வீதி உள்ளிட்ட பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்குவதாகவும் நாவலப்பிட்டி நகர வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X