2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

கந்தப்பளை நகரில் இறைச்சி கடை தீக்கிரை

Editorial   / 2019 ஏப்ரல் 05 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்,எஸ்.சதீஸ்

நுவரெலியா கந்தப்பளை  நகரில் அமைந்துள்ள இறைச்சிக் கடையொன்று, நேற்றிரவு (04) திடீரென தீப்பற்றி எரிந்ததில், அருகிலுள்ள குடியிருப்பொன்றும்  முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

தீ பரவியதையடுத்து, சம்பவ இடத்துக்கு நுவரெலியா  மாநகர சபை தீயணைப்பு பிரிவு விரைந்து வந்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கந்தப்பளை  நகரில், மின் வெட்டு  அமுல்படுத்தப்பட்டிருந்தபோதே, இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில்,  கந்தப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .