2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கந்தப்பளையில் வீடு தீக்கிரை

Editorial   / 2019 ஜூன் 28 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

கந்தப்பளை தேயிலைமலைத் தோட்டத்தில், மூன்று குடும்பங்கள் தனித்தனியே வசித்து வந்த வீடொன்று, இன்று (28) காலை தீக்கிரையாகியுள்ளது.

மின்சார ஒழுக்கினால் இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று, கந்தப்பளை பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தினால் எவருக்கும்  எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் எனினும், வீடு, வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் என்பன தீக்கிரையாகியுள்ளன என்றும், பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து இடம்பெறுமபோது, குறித்த  வீட்டில் பெண்ணொருவர் மாத்திரமே இருந்துள்ளார் என்றும் அவர், இவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X