2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கொழும்பிலிருந்து டிக்கோயாவுக்கு சென்ற ஐவர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Kogilavani   / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

கொழும்பிலிருந்து டிக்கோயா பிரதேசத்துக்குச் சென்ற ஐவர், அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, ஹட்டன் பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து  நோட்டன், நோர்வூட் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றவர்களின் தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மேலும் கொழும்பு போன்ற வெளிமாவட்டங்களிலிருந்து தங்களது ஊர்களுக்குத் திரும்பியவர்கள் தொடர்பில், உடன் தமக்கு தகவல் தருமாறு, பொதுசுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X