2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காணாமல் போன குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Editorial   / 2019 பெப்ரவரி 20 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ரஞ்சித் ராஜபக்‌ஷ      

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோல்புறூக் லோவர் கிரன்லி தோட்டத்தில் நேற்று  (19)  மாலை 4 மணியளவில் காணாமல் போன 2 வயதுடைய யசிப் விதார்த் என்ற குழந்தை இன்று காலை 9 மணியளவில் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது.

 சுமார் 18 மணித்தியாலயங்களுக்கு பிறகு அப்பகுதி தேயிலை மலை பகுதியிலிருந்து

குழந்தை  மீட்கப்பட்டுள்ளது.

தனது வீட்டில் விளையாடி கொண்டிருந்து விட்டு வெளியே சென்றப் போதே குழந்தை திடீரென காணாமல் போயிருந்தது.

இதனையடுத்து குழந்தையை தேடும் பணியில் பொலிஸாரும், பிரதேசவாசிகளும், தலவாக்கலை விசேட அதிரடி படையினரும் ஈடுப்பட்டிருந்தனர்.

நேற்று இரவு வரை தேடியும் கிடைக்காத பட்சத்தில் இன்று காலை பிரதேசவாசிகள் அப்பகுதி தேயிலை மலைகளில் தேடும் பொழுது மேற்படி குழந்தையின் வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் தேயிலை மலை பாதையில் குறித்த குழந்ழை மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குழந்தை அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மற்றும் நுவரெலியா பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .