2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காபன் வரிக்கு எதிராக நாவலப்பிட்டியில் பேரணி

எஸ்.சதிஸ்   / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், காபன் வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாவலப்பிட்டி பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் சாரதிகள், உரிமையாளர்கள், நாவலப்பிட்டி நகரில், நேற்று (2) ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

வாகனங்களுக்கான காபன் வரி அதிகரிக்கப்பட்டமையால், தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே காபன் வரியைக் குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் பேரணியில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

காபன் வரி குறைக்கப்படவில்லையெனில், நாவலப்பிட்டி நகரில் முன்னெடுக்கப்பட்ட இந்த எதிர்ப்பு நடவடிக்கை, நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X