2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குடிநீர்த் திட்டங்கள் கையளிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 04 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராபி சிஹாப்தீன்

கண்டி, பன்வில பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட குடிநீர்த் திட்டங்களை, மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு, நேற்று (3)  நடைபெற்றது.

கல்வல வீதி குடிநீர் வழங்கல் திட்டம், விக்னேஸ்ரன் வீதி குடிநீர் வழங்கல் திட்டம், ஆயுர்வேத வீதி குடிநீர் வழங்கல் திட்டம், பன்வில ராக்ஷாவ கீழ் பகுதி குடிநீர் வழங்கல் திட்டங்கள் என்பனவே, மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஆகியோர் கலந்துகொண்டு, குடிநீர்த் திட்டங்களை, மக்களின் பாவனைக்காகக் கையளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .