2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

குடும்பநல சுகாதார தாதிக்கு கண்டனம்

Editorial   / 2018 மே 28 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை, கிளன் அல்பின் பெருந்தோட்டத்தில், குடும்பநல சுகாதாரத் தாதியாகச் செயற்பட்டுவரும் பெண், இனவாதப் போக்கில் நடந்துகொள்கிறாரெனக் குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் இரா.சலோபராஜா, மேற்படி தாதியின் செயற்பாடுகளுக்குக் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

சகோதர இனமொழியைச் சேர்ந்த மேற்படி தாதி, தோட்டத்திலுள்ள கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுடன் உள்ள தாய்மார்களுக்கும் ஆலோசனைகளை வழங்கும்போது, தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், கடும்போக்குடன் நடந்துகொள்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தன்னிடம் முறையிட்டுள்ளனர் என, சாலோபராஜா மேலும் தெரிவித்தார்.

எனவே, குறித்த தாதிக்கு எதிராக, சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .