2024 மார்ச் 28, வியாழக்கிழமை

குப்பைகளால் அசௌகரியம்

Editorial   / 2019 ஜூலை 23 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

 

மஸ்கெலியா நகரிலுள்ள தனியார் காணிகளில் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக, நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.

மஸ்கெலியா பிரதேச சபையின் ஊடாக, 'பசுமையான நகரம் சுத்தமான நகரம்” என்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு  வருகின்ற போதிலும், மஸ்கெலியா நகர தனியார் காணிகளில், ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன என்றுச் சுட்டிக்காட்டப்படுகிறது.

தற்போது மழையுடன் கூடிய வானிலை நிலவிவருவதால் நுளம்புகள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   

எனவே இது தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனஞ்செலுத்த வேண்டும் என்பதுடன், எதிர்காலத்தில் இப்பகுதியில் குப்பைகளை வீசுவதைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X