Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
ஆ.ரமேஸ் / 2020 ஜூன் 02 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கூம்ஸ் தோட்ட மேல் பிரிவில், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், இன்று (02) பெண்ணொருவர் உயிரிந்துள்ளார் என, லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
காசிம் அலிமும்மா பீபி எனும் 58 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
சென்கூம்ஸ் மேல் பிரிவு தோட்டத்தில், இலக்கம் 01 தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த குளவிக்கூடு கலைந்து, தொழிலாளர்களைக் கொட்டியுள்ளது.
இந்நிலையில், ஒரு பெண் உயிரிழந்ததுடன், மேலும் மூலம் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் தொழிலாளியின் சடலம் பிரதே பரிசோதனைக்காக, லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
டிக்கோயா தரவலை தோட்டத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அம்பிகா (52) என்பவர், கடந்த மாதம் 25ஆம் திகதி, குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
4 hours ago
7 hours ago
7 hours ago