2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

குளவிக்கொட்டுக்கு இலக்காகி எழுவர் பாதிப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊட்டுவள்ளி  சின்ன தோட்டத்தில், நேற்று (01) தேயிலை பறித்துக்கொண்டிருந்த 7 பெண் தொழிலாளர்கள், ​குளவிக்கொட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி, அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன​ரென, ​பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தங்களது தோட்டப் பகுதியில் காணப்படும் அதிகளவான குளவிக்கூடுகள் காரணமாக, மிகுந்த அச்சத்துடன் தாங்கள் பணியாற்றி வருவதாக, தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, அதிகாரிகளுக்கு எத்தனை முறை அறிவித்தாலும், அவர்கள் அசமந்தப்போக்குடன் செயற்படுவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .