Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
ஆர்.மகேஸ்வரி / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உள்ளே பூனையாக இருந்து விட்டு வெளியே வந்து சிங்கம் போல் கர்ஜிப்பதாகவும், அவர்களது கூட்டு ஒப்பந்த பேச்சு வார்த்தையின் போது, நியாயமான கூலி கிடைக்காவிடின் பேனாவை மூடிவிட்டு வெளியே வந்து எம்முடன் இணைந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் தெரிவிக்க வரவேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சில் இன்று (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
பெருந்தோட்ட மக்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி குறித்து விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. கடந்த பல 25 வருடங்களாக செய்து வரும் கூட்டு ஒப்பந்தத்தில் மக்களின் வாழ்வாதார செலவுகளுக்கு அமைய சம்பள கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை. இது இன்று இக்கட்டான நிலைக்கு வந்துள்ளது. எனவே இதற்கான பொறுப்பை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்றார்..
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago