2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொழுந்தைத் திருப்பியமையால் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 மார்ச் 23 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்துக்குக் கீழ் இயங்கும் நோர்வூட் - டிக்கோயா பொயிஸ்டன் தோட்டத் தொழிலாளர், இன்று காலை, பொயிஸ்டன் தோட்டத் தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்தத் தோட்டத் தொழிலாளர்களால், நேற்று (22) பறிக்கப்பட்ட சுமார் 1,000 கிலோகிராம் தேயிலைக் கொழுந்தை, தோட்ட நிர்வாகம் திருப்பிய​னுப்பியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், 150க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

தோட்டத் தொழிலாளர்களால் பறிக்கப்பட்ட பல கொழுந்துகள், முறையாக பறிக்கப்படவில்லை என்றும் அதனாலேயே, திருப்பி அனுப்பியதாகவும் தோட்ட முகாமையாளர் தெரிவித்தார்.

அத்தோடு, இந்தக் கொழுந்துகளை, மீண்டும் தொழிற்சாலைக்கு அனுப்புவதற்கு கலந்துரையாடப்பட்டுள்ளது என, முகாமையாளர் தெரிவித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .