2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’சமூர்த்தி வழங்குவதில் கட்சிபேதம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

சமூர்த்தி கொடுப்பனவு வழங்குவதில், கட்சி பேதம் பார்க்கப்படுவதாக, கொத்மலை பிரதேச சபையின் உறுப்பினர் ரஜினிகாந்த், நேற்று (26) தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், சமுர்த்தி கொடுப்பனவு வழங்குவதில், டன்சினன் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் உள்வாங்கப்படவில்லை என்றும் ஆனால், டன்சினனைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும், இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐ.தே.க, அதனை சார்ந்திருக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கு மட்டுமே, சமூர்த்தி வழங்கப்படுவதாகவும் இதனால் டன்சினன் தோட்ட மக்களும் அதிருப்தியிலேயே காணப்படுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .