2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சாமிமலை முருகன் கோவில் பாலஸ்தாபன கும்பாபிஷேகம்

செ.தி.பெருமாள்   / 2019 ஜனவரி 14 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாமிமலை அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ முருகன் தேவஸ்தான பாலஸ்தாபன கும்பாபிஷேகம், எதிர்வரும் 20ஆம் திகதி, காலை 10 மணிக்கு ஆரம்பமாகி, 11.30 மணி வரை நடைபெறவுள்ளது.  

இதையொட்டி, எதிர்வரும் 19ஆம் திகதி காலை 8.45மணிக்கு, விநாயக வழிபாடு கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி ஆகியன இடம்பெறும் என்றும் 20ஆம் திகதி காலை 8.00 மணிக்கு, பிரபஸ்தாபனம், யாக பூஜை, தேவார பாராயணம், பிரசாதம் என்பன இடம்பெறும் என்றும் 21ஆம் திகதி தை பூச திருவிழா ஆற்றடி பிள்ளையார் ஆலயத்திலிருந்து, பால்குட பவணி இடம்பெறவுள்ளது.  

தொடர்ந்து விஷேட பூஜைகள், பொதுமக்கள் பூஜை இடம் பெற்ற பின்னர் மஹேஸ் வர பூஜை இடம்பெறும். அதைத் தொடர்ந்து, பகல் 1.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது என்றும், எனவே, பக்தர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ளுமாறு, ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X