2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிறுத்தையின் தாக்குதலில் ஒருவர் காயம்

Kogilavani   / 2017 செப்டெம்பர் 21 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவு, கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில், சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி, எஸ்.கலைக்குமார் (வயது- 25) என்பவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

ரொசிட்டா  தோட்டம், 7 இலக்க தேயிலை மலையிலுள்ள தேயிலைச் செடிகளுக்கு, இன்று உரம் போட்டுக்கொண்டிருந்தபோதே, மேற்படி நபர் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளானவர்,  கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாரென, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .