2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சிவனடிபாதமலைக்கு வந்த பெண் மாரடைப்பால் மரணம்

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

சிவனடிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்டிருந்த பெண்ணொருவர், மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என்று, நல்லதண்ணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லக்சிறி பெர்ணான்டோ  தெரிவித்தார்.

களுத்துறையைச் சேர்ந்த கருணாவதி (வயது 69) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

சிவனடிபாதமலையை தரிசித்துவிட்டு கீழ் இறங்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உடனடியாக அவரை, நல்லதண்ணி நகரில் இருந்து அம்பியுலன்ஸ் வண்டியினூடாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கிய போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என்றும், மாவட்ட வைத்திய அதிகாரி லியத்தப்பிட்டிய தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X