2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சுற்றுலாப் பிரதேசமாக கேகாலை அபிவிருத்தி

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை மாவட்டத்தை, சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய மாவட்டமாக மேம்படுத்துவதற்கான திட்டம், இன்று (01) ஆரம்பிக்கப்பட்டது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில், உத்தேச நகரத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா, நேற்று இடம்பெற்றது.

கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான கலிகமுவ அட்டளைத் தோட்டத்தில், அந்த நகரம் அமையவுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு முதற்கட்டமாக, 20.5 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திக்கான சந்தை வாய்ப்பும், இங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X