2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

செம்புவத்தையில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:56 - 2     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ், மஹேஸ் கீர்த்திரத்ன

மாத்தளை - உக்குவளைப் பிரதேசத்தில், பெருந்தோட்டக் கைத்தொழிற்றுறை அமைச்சின் கீழ் இயங்கும், எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி நிர்வாகத்தின் ஏதேச்சதிகாரப் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதேச மக்கள் இன்று (21)  காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி தோட்டத்தில், மினரல் வோட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக, தோட்ட மக்கள் பயன்படுத்தும் ஊற்றுநீரைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எல்கடுவ செம்புத்தைத் தோட்டத்தின் கன்னியம்மா கோவில் அமைந்துள்ள பகுதியிலுள்ள கிணற்று நீரை, செம்புவத்தை, ரோட்லா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் தமது குடிநீர் தேவைக்காக இதுவரை காலமும் பயன்படுத்த வந்தனர்.

எனினும் தோட்ட நிர்வாகமானது, ஊற்றுநீரை மறித்து  தனியார் "மினரல் வோட்டர்” கம்பனியை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதனைக் கண்டித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 2

  • இராமையா புவனேஸ்வரன் Thursday, 22 August 2019 03:02 PM

    மேற் காணும் செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ள செயலானது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த குடிநீர் வியாபாரத் திட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. செம்புகவத்தை மற்றும் ரோட்டலா வாழ் மக்கள் இந்த நீரையே குடிநீராக பயன்படுத்துகிறார்கள்.1980 - 1990 ளில் ஜப்பான் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் முறையான நீர் பாசனத் திட்டம் நிறைவேற்றப்பட்டு ரோட்டலா வாழ் மக்களுக் நீர் வழங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை தங்குதடையின்றி சுதந்திரமாக இந்த நீரையே பயன்படுத்தி வருகின்றார்கள். இது அவர்களின் உரிமை. எமது உரிமைகளை எவருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக் முடியாது... இதை கருத்தில் கொண்டு எமது தலைமைகள் எமக்கு பக்கபலமாக நின்று எமது உரிமைகளை மீட்டெடுக்கவும் இப்படியான மோசடிகள் எதிர்வரும் காலங்களில் நடக்காதிருகவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Reply : 0       0

    Prabagara Thursday, 22 August 2019 03:16 PM

    Sempuwatta mattumalla ella malayaga makkalin valvilum ippatiyana innalgal natakinradu aagave thamilargal onru para ventiya tharunamm

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .