2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சௌமிய பவனில் நாளை நவராத்திரி

Kogilavani   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவனில், நாளை புதன்கிழமை நவராத்திரி விழா ஆரம்பமாகி, எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இதனை முன்னிட்டு 9 நாட்களுக்கும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

இன்று நடைபெறவுள்ள ஆரம்ப பூஜையில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம், சட்டத்தரணி கா.மாரிமுத்து மற்றும் இ.தொ.காவின் தலைமையக காரியாலய உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .