2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜனாதிபதித் தேர்தலில் ’சின்னம் முக்கியம் அல்ல: கொள்கையே முக்கியம்’

Editorial   / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

 

ஜனாதிபதித் தேர்தலில் யார் எந்தச் சின்னத்தில் போட்டியிடுகின்றார் என்பது முக்கியம் அல்ல என்றும் போட்டியிடுபவர் எத்தகையக் கொள்கையைப் பின்பற்றுகிறார் என்பதே முக்கியம் என்றும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவுத் தெரிவித்து, ஹட்டனில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவத்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஒரு காலத்தில் மலையக மக்களின் ஆயிரக் கணக்கான வாக்குகள் வீணாகி விடும் என்ற நிலை இருந்தது என்றும் ஆனால் இன்று அந்த நிலை மாற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் மிகவும் நிதானமாகவும் துல்லியமாகவும் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

“ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ “அன்னம்” சின்னத்தில் போட்டியிடுகின்றார். அவர் எந்தச் சின்னத்தில் போட்டியிடுகின்றார் என்பது முக்கியம் அல்ல: போட்டியிடுபவரின் கொள்கை எத்தகையது என்பது தான் முக்கியமாகும்”  என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X