2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டெங்கு தொடர்பில் அவதானம் தேவை

Editorial   / 2017 டிசெம்பர் 22 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது மழை காலம் என்பதால், டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்ககூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் எனவே, பொதுமக்கள் அது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென்றும், சுகாதார அமைச்சின் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.   

இவ்வருடம், இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 180,749 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்துக்கு பொதுமக்களும் உதவ வேண்டுமென்றும் சுகாதார பிரிவு பொதுமக்களிடம் கோரியுள்ளது.   

மத்திய மாகாணத்தில் மட்டும் இதுவரையான காலப்பகுதியில், 18,036 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார அமைச்சின் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 12 மாதங்களில் 878 டெங்கு நோயாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 3,056 டெங்கு நோயாளர்களும் கண்டி மாவட்டத்தில் 14,099 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனரென, அப்பிரிவு மேலும் கூறியுள்ளது.   

இவ்வருடம் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். டெங்குத் தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களின் உதவியும் அவசியம் என்று, சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .