2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

த.மு.கூட்டணியின் மே தின கூட்டம் மற்றும் பேரணி

Editorial   / 2018 மே 06 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்துள்ள மே தின பேரணியானது, நாளை (07) மு.ப 10.00 மணியளவில், தலவாக்கலை பஸ் தரிப்பிட அருகில் ஆரம்பிப்பதோடு, மே தின கூட்டமானது தலவாக்கலை நகர மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், மற்றும் அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன்  தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மேதின நிகழ்வில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான அமைச்சர்கள் பழனி திகாம்பரம், வி.இராதாகிருஸ்ணன, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வேலு குமார், ஏ.அரவிந்தகுமார் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொள்வுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .