2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தங்க நகைகள் கொள்ளை

Editorial   / 2018 மார்ச் 23 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாஹிட் குத்தூஸ்   

பதுளை நகரிலுள்ள நகைக் கடையொன்றில், சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த பொலிஸார், சம்பத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம், நேற்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடையின் 3ஆம் மாடிக் கதவு வழியாக உள்நுழைந்த கொள்ளையர்கள், மாடியின் கீழ் தளத்தில் கண்ணாடி அலுமாரியிலிருந்த தங்க நகை, வெள்ளி மோதிரம் உள்ளிட்ட ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .