2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தமிழ் கற்ற தேரர்களுக்கு சான்றிதழ்

Editorial   / 2017 டிசெம்பர் 22 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

கண்டி, வத்துகாமம் பிட்டியேகெதர ரஜ மகா விகாரையில், தமிழ்மொழி பயிற்சிபெற்ற பௌத்த பிக்குகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, வத்துகாமம் பிட்டியே ரஜ மகா விகாரையில், எதிர்வரும் 23ஆம் திகதி, முற்பகல் 9 மணிக்கு நடைபெறவுள்ளது.  

பிட்டியேகெதர ரஜ மகா விகாராதிபதி கெவுல்கம சுமணசார தேரர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கண்டி மாவட்டச் செயலாளர் எச்.எம்.பீ.ஹிட்டிசேகர, பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.  

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனப் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ஆர்.ஹேரத், கண்டி மாவட்ட தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் திசாந்தி ஏக்கநாயக்க மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.  

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் இப்பாடநெறி தேசிய மொழிக் கல்வி பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்பட்டது.  

“தேசிய நல்லிணக்க செயன்முறைக்கு வலு சேர்க்கும் வகையில் இப்பாடநெறி அமைந்துள்ளமை, விசேஷட அம்சமாகும்” என்று, தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் சந்தன ஞானரத்ன தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .