2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்று களத்தில்

Editorial   / 2017 டிசெம்பர் 20 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்   

“தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வேட்பு மனுக்கள், இன்று (20) தாக்கல் செய்யப்படவுள்ளன” என்று, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டணியின் நிதிச் செயலாளருமான எம்.திலகராஜ் தெரிவித்தார்.   

“எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பல்வேறுத் துறைகளைச் சேர்ந்த வேட்பாளர்களே கூட்டணியின் சார்பில் போட்டியிடவுள்ளனர்” என்றும் அவர் கூறினார்.  
இது தொடர்பாக மேலும் கூறியுள்ள அவர்,   

“ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி, முதன் முறையாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சந்திக்கின்றது.   

“இந்தத் தேர்தலில் எமது கூட்டணியின் சார்பில், பல்வேறுத் துறைகளைச் சார்ந்த வேட்பாளர்களே, நிறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களில் மூத்த தொழிற்சங்கவாதிகள் மூன்று பேர் இடம்பெறுகின்றனர்.   

“மேலும், தொழிற்சங்கவாதிகள், தொழிற்சங்க உறுப்பினர்கள் தோட்டக் கமிட்டித் தலைவர்கள், தலைவிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மகளிர் அணியின் முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள், ஊடகத்துறைச் சார்ந்தவர்கள், தொழில் வழங்குநர்கள், அரசாங்க மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், வைத்தியர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள், முன்பள்ளி ஆசிரியைகள், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள் என பலதரப்பட்டவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்” என அவர் மேலும் கூறினார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X