2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தாதியின் மரணத்தில் சந்தேகம்; நீதியான விசாரணைக்கு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 பெப்ரவரி 13 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

 

ஹட்டனிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றிய பெண் தாதியின் மரணத்தில்,  சந்தேகம் நிலவுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதேவேளை, அந்த மரணம் தொடர்பில்,  நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, ஹட்டனை மய்யமாகக் கொண்டு இயங்கிவரும் சிவில் அமைப்புகள், ஹட்டன்- டிக்கோயா நகரசபைக்கு முன்பாக, நேற்று (12) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலவாக்கலை- வட்டகொடை ஒக்ஸ்போட் பிரதேசத்தைச் சேர்ந்த தாதியொருவரே,   ஜனவரி மாதம் 28ஆம் திகதி மரணமடைந்தார். 

தன்னுடைய மரணத்துக்கு, குறித்த வைத்தியசாலையின் உரிமையாளரும் அவரது மனைவியுமே காரணமென, குரல்பதிவொன்றை வட்சப்பின் மூலம் தனது பெற்றோருக்கு அறிவித்துவிட்டு, குறித்த யுவதி தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தாதியின் மரணம் தொடர்பில் ஆதாரங்கள் காணப்பட்டும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் ஹட்டன்- டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை, மரண விசாரணை என்பன முறையாக முன்னெடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த யுவதியின் உறவினர்கள், பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளனர். 

தாதியின் மரணம் தொடர்பில், ஹட்டன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நேற்று (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த விசாரணை நீதியாக இடம்பெற்று, குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் தாதியின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுமே, சிவில் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இவ்வழக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே.சொக்ஸி முன்னிலையில், நேற்று (12) விசாரணைக்கு எடுத்துக்கொ
ள்ளப்பட்டபோது, இச்சம்பவம் தொடர்பில், முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு, பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்த நீதவான், முறையான சாட்சிப் பதிவுகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டதுடன், வழக்கை, எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .