2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

திரிபோசா பக்கெட்டுகளை முறையாக வழங்கவும்

செ.தி.பெருமாள்   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டங்களிலுள்ள கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு, யுனிசெப் நிறுவனத்தால் இலவசமாக வழங்கபடும் திரிபோசா பக்கெட்டுகள், முறையாக வழங்கப்படுவதில்லை என, பெருந்தோட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, மஸ்கெலியா பிளான்டேஷனுக்கு உட்பட்ட தோட்டங்கள் பலவற்றிலேயே, திரிபோசா பக்கெட்டுகள் இவ்வாறு முறையாக வழங்கப்படுவதில்லை என்று தெரியவருகிறது.

எனவே, இலவசமாக வழங்கப்படும் திரிபோசா பக்கெட்டுகளை உரியவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு உரிய நிறுவனம் முன்வர வேண்டுமென்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், தோட்ட முகாமையாளர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் பிரதேச மக்கள் கோருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X