2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கையளிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்   

லிந்துலை பம்பரகலை தோட்டம், குட்டி மலைப் பிரிவில், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள், நேற்று (31) முன்தினம் கையளிக்கப்பட்டன.  

இந்நிகழ்வில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவரும் அக்கரப்பத்தனை பிரதேச சபையின் உறுப்பினருமான எஸ்.சிவானந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.   

மேற்படி 20 குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் செலவில்,வீடுகள் அமைத்து் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் போக்குவர்து வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி போன்றவையும்  ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X